மத்திய மலைநாட்டில் கடும் வறட்சி : பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாகக் குறைவு
மத்திய மலைநாட்டில் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீர்தேக்க பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, அதன் நீர்மட்டம் சடுதியாகக் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி நுவரெலியா - மஸ்கெலியா பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ மற்றும் மவுசாக்கலை ஆகிய பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்று (24.04.2026) காலை 6 மணி நிலவரப்படி, அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 50 அடி 11 அங்குலமாகக் குறைந்துள்ளது.
14 மில்லிமீட்டர் மழை
இருப்பினும், நேற்று (23.04.2026) அந்த நீர்த்தேக்கத்தில் 12 மில்லிமீற்றர் மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும், வழிந்தோடும் மட்டத்திலிருந்து 40 அடி மற்றும் 10 அங்குலம் வரை குறைந்துள்ளது.
எனினும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நேற்று (23.04.2026)14 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த இரண்டு நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீரில் மூழ்கியிருந்த பழைய சிதைவுகள் மற்றும் தொல்பொருள் படிவுகள் தற்போது மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளன.
நாட்டிலுள்ள முக்கிய மின்நிலையங்களான விமலசுரேந்திர, லக்சபான, மற்றும் பொல்பிட்டிய போன்ற நீர்மின் நிலையங்களுக்கு குறித்த நீர்த்தேக்கங்களிலிருந்து பெரும் நீரினால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |