யாழ். அரசடி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Crime
By Kanooshiya Oct 10, 2025 08:57 AM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report

பிள்ளைகளை சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தி பல்வேறு இடையூறுகளை மேற்கொள்ளும் நபரிடமிருந்து, தமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறு கோரி யாழ்ப்பாணம் அரசடி வாழ் மக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, பிரதேசவாழ் மக்களது இயல்பு வாழ்வைய உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை நேற்று (09.10.2025) முற்பகல் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசடி வாழ் மக்கள் இவ்விடயத்தை தெரிவித்தனர்.

மாகாவலி ஆற்றில் தோன்றிய மாயமான மாணவர்களின் சடலங்கள்!

மாகாவலி ஆற்றில் தோன்றிய மாயமான மாணவர்களின் சடலங்கள்!

குற்றச் செயல்கள் 

மேலும் கருத்து தெரிவித்த அரசடி பிரதேச மக்கள் “குறித்த நபர் நீண்டகாலமாக பல்வேறு சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றுவரும் ஒருவர்.

யாழ். அரசடி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! | Complaint To Government Human Rights Commission

எமது அரசடி பகுதியில் வாள்வெட்டு சம்பவங்கள் இவரது பின்னணியில்தான் நடைபெற்று வருகின்றன.

இவை தொடர்பில் காவல்துறைக்கு முறைப்பாடு செய்தும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. இதனால் நாம் நாளாந்தம் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றோம்.

இந்நிலையில், அண்மையில் அரசடியில் குறித்த சட்டவிரோத நபரால் வெளியூரில் இருந்து சிலர் வரவழைக்கப்பட்டு வாள்வெட்டு சம்பவம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பின்வாங்கும் இஸ்ரேல்! இடிபாடுகளில் இருந்து மீட்க்கப்பட்ட உடல்கள்

பின்வாங்கும் இஸ்ரேல்! இடிபாடுகளில் இருந்து மீட்க்கப்பட்ட உடல்கள்

காவல்துறையினர் கைது 

இதன்போது எமது பிள்ளைகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது ஒருவர் காயங்களுக்குள்ளானார். இதைக் காரணமாக வைத்து எமது ஏழு பிள்ளைகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

யாழ். அரசடி மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! | Complaint To Government Human Rights Commission

எனினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இந்நிலையில் தான் எமது பிள்ளைகள் மீது தேவையற்ற வகையில் போலியான வழக்குகள் காவல்துறையினரால் பதியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியே இன்று மனித உரிமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்” என தெரிவித்தனர்.

கண்கள் தோண்டி விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! உறைய வைக்கும் உண்மைகள்

கண்கள் தோண்டி விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! உறைய வைக்கும் உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020